யாமக்கோடங்கி - நூல் வெளியீடு - சென்னை
கடந்த திங்கள்கிழமை 25.12.23 அன்று சால்ட் பதிப்பக வெளியீடாக ஆறு கவிதை நூல்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. அதில் ஒன்றாக எனது கவிதை நூல் "யாமக்கோடங்கி" யும் இடம்பெற்றிருந்தது அளவற்ற மகிழ்ச்சி. கவிஞர் முத்துராசக்குமார் நெறியாள்கையில், கவிஞர் மனுஷ்யபுத்திரன் தலைமையுரையோடு நிகழ்வு துவங்கியது. தமிழ்க்கவிதைகளுக்கும் கவிஞர்களுக்குமான இன்றைய இடத்தையும் வருங்காலங்களில் அது நகர வேண்டிய இடத்தையும் கவிதை மேல் உள்ள வழக்கமான தன் அக்கறையைத் தலைமையுரையில் வெளிப்படுத்தினார் கவிஞர் மனுஷ்யபுத்திரன். அடுத்ததாக எனது நூலறிமுக உரையாற்றிய கவிஞர் ஸ்டாலின் சரவணன் கவிதைகளைப் பற்றியும், என்னுடைய அடுத்த நகர்வுக்கு தேவையான கருத்துக்களையும் பேசியது புது நம்பிக்கையளித்தது. சில வருடங்களுக்கு முன் அவருடைய, "ஆரஞ்சு மணக்கும் பசி" பற்றிய ஒரு தொலைபேசி உரையாடல், இந்த மேடையில் முதன்முறையாக அவர் சந்திப்பையும், இனி வரும் நாட்களில் அவரின் துணையையும் உறுதி செய்த காலத்திற்கு நன்றி. புத்தகத்தை என் மனைவி பாகீரதி வெளியிட, அம்மா பூமாதேவி தாயுமானவன் பெற்றுக்கொண்டார்கள். தேவ