நுரை தின்றா பசி தீரும் ?


உரிமை இழந்து நிற்கையிலே - உங்கள்
    உடன்படிக்கை ஒத்துவரு மென்றீர்
பதுங்குகுழியில் பதுங்கிய வேளையிலே - நாங்கள்
    பகட்டுவீடு  கட்டநிதி ஒதுக்கினீர் 
உயிருறுப்பை அவர்கள் நறுக்கையிலே - இருவரையும்
    உக்காந்து பேசிதீர்க்க சொன்னீர் 
கற்பிழந்து எம்பெண்கள் கதறுகையிலே -சூறையாடிய
     காமநாடிகளையே விசாரிக்கச் சொன்னீர் 
பன்னாட்டு விசாரணை தேவையில்லை - இனவழிப்பிற்கு
     உள்நாட்டு விசாரணையே உத்தமமென்றீர் 

அட உலக பதருகளா ..

நுரை தின்றா பசி தீரும் ? ...உங்கள்
சொல் கேட்டா எம்நாடி யடங்கும் ?

வயிற்றுப்பசி தன்னை வைராக்கியத்தால் அடக்கிடுவோம் 
உள்ளப்பசி தன்னை உயிர்நீங்கினும் அடக்கிலோம் 

எங்கள் இதயத்தின் தாகம் .. தமிழீழத் தாயகம் !!

 (மே 2013 கவிமாலையில் பரிசு பெற்றது)

Comments

Popular posts from this blog

கன்னி

இளையராஜா இசையின் தத்துவமும் அழகியலும்

குளக்கரையில் இளைப்பாறும் வரலாறு