Posts

ஆணவம்

மண்ணோடு கலந்து மரணித்த சகாக்களை ஏளனமாய் பார்க்கின்றன உன் விரலோடு ஒட்டியுள்ள எஞ்சிய கோலப்பொடிகள் ... கையை துடைக்கையில் உன் முந்தானைக்குள் முக்தியடையும் ஆணவத்தில் ! 14-02-2014

விடுதலை

விடுதலை செய்து விடுதலை செய்து வெறுத்துப் போனது காற்று. காதோரக் கூந்தலைக் கைதுசெய்து மடலுக்குள் தள்ளிக்கொண்டிருக்கும் உந்தன் வீம்பான விரல்களைப் பார்த்து !

கதாநாயகி

Image
     சிறுகதைகளை, நாவல்களை அல்லது அவற்றில் வரும் பாத்திரங்களை வேறொரு கலைப் படைப்பாக உருமாற்றம் செய்யும்போது ஏற்படும் அனுகூலங்களும் சிக்கல்களும் அனைவரும் அறிந்ததே ஆனால் மேற்கண்ட படைப்புகள் / கதாபாத்திரங்கள்  இன்னொரு சிறுகதைக்குள்ளோ நாவலுக்குள்ளோ  உயிர்த்தெழும்போது கிடைக்கும் வாசிப்பின் கூர்மை அலாதியானது, அனுபவிக்க வேண்டியது. அதே சமயம் எந்தச் சிக்கலும் இல்லாமல் அந்த அனுபவத்தைத் தர படைப்பாளி கூடுதல் உழைப்பைத் தந்து கூடுதல் வாசக மனநிலையை அடைய வேண்டும். அந்தப் பிரயத்தனங்களை வெளிக்காட்டும் படைப்பு ஜெமோவின்  'கதாநாயகி'. அடர்ந்த காடு நிறைந்த மலைப்பகுதியில் தொடங்குகிறது நாவல். அங்கு ஆசிரியப் பணிக்கு செல்லும் நாயகன் படிப்பதற்காக இன்னொரு நாவல் ஒளிந்திருக்கிறது.  நாவலை வாசிக்க ஆரம்பித்ததும் அதில் உள்ள கதாபாத்திரங்கள் உயிர்த்தெழ ஆரம்பிக்கின்றன. காட்டுப் பங்களாவுக்குள் தனியறைக்குள் இருப்பவனிடம் 17 ஆம் நூற்றாண்டில் ஐரோப்பிய கண்டத்தில் வாழ்ந்த பெண்கள் பேச ஆரம்பிக்கின்றனர். பழங்குடி பிள்ளைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுக்கும் அவனோடு இன்னொரு நாவலின் ஆசிரியரான ஃபேன்னி பர்னி,அ...

எல்லா உயிரும் பசி தீர்க்க

Image
தன்னறம் பதிப்பகத்தின் மற்றுமொரு நல்ல படைப்பு. ஈரோடு புத்தகத்திருவிழாவில் ஐயா நம்மாழ்வார் பேசிய நீள் உரையின் எழுத்து வடிவம். சரஸ்வதி ராதாகிருஷ்ணன் அவர்களின் எழுத்தாக்கத்தில் வந்துள்ளது. வழக்கம்போலத் தன்னறத்தின் சமூகக் காதலும் அதோடு கூடிய அக்கறையும் புத்தக வடிவமைப்பில் தெரிகின்றது. எடுவர்டோ கலியானோவில் தொடங்கி வண்ணதாசன் கவிதையில் நிறைவாகிறது புத்தகம். பசியால் சுழல்கிறது உலகம். பசியால் நடந்துகொண்டிருக்கிறது உயிர்களின் சுழற்சி. உடல் பசி தொடங்கி உள்ளப் பசி வரை உயிர் நரம்புகளைக் கைகளில் இறுக்கி பிடித்திருக்கிறது பசி என்னும் சாத்தான் ; பசி என்னும் தெய்வம். பசி என்றவுடன் கவிஞர் இளங்கோ கிருஷ்ணனின் கவிதை ஒன்று நினைவுக்கு வரும். “ ஆனால் பசியை நீங்கள் குறைத்து மதிப்பிடுகிறீர்கள் என்னிடம் ஒரு பசிதான் உள்ளது மறுபுறம் இன்னமும் பல நூறு ஆண்டுகளுக்கான உணவு உள்ளது அதைக் கொண்டு ஆயிரம் பசிகளைப் பணியில் அமர்த்துவேன் பல நூறு உணவின் பெயர் சொல்லி பல்லாயிரம் பசியைப் பெருக்குவேன் ஒரு பசியைக் கொண்டு இன்னொரு பசியை அடக்குவேன் எதிர்த்து வரும் பசிகளுக்கு ரொட்டித் து...

என் ஆடை என்பது யாருடைய குருதி?

Image
பஞ்சாலை சத்தங்களுக்கு இடையே வளர்ந்தது தான் என் பால்யம். இன்னும் சொல்லப்போனால் அந்தச் சத்தங்களின் விளைச்சலில் அறுவடையானது தான் என் பள்ளிப் படிப்பும் பட்டயக் கல்லூரிப் படிப்பும். அதே நேரத்தில் மில்லு வேலைக்கு என் அண்ணன்களையும் நண்பர்களையும் தம்பிகளையும், தெக்கால டைமண்ட் ஃபேக்டரிக்கும் வடக்கால பிராந்தி கம்பெனிக்கும் அக்காக்களையும் தோழிகளையும் தங்கைகளையும் உற்பத்தி செய்து கொடுத்துக் கொண்டிருந்தது நடுவே இருந்த நான் படித்த நரசிம்மநாயக்கன்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி. கல்வியும் ஆசிரியர்களும் எவ்வளவு முயன்றாலும் அவர்களால் குடும்பங்களின் வறுமையோடு அப்பொழுது போட்டியிட்டு வெல்ல முடியவில்லை. இன்று நிலைமை மாறிக்கொண்டிருக்கிறது. ஆனால் முழுமையாக இல்லை. மில் வேலை முடித்து வருபவர்களின் தலையிலும் உடலிலும் ஒட்டி வரும் பஞ்சு மட்டுமே அன்றாடப் பிரச்சினையாகவும், தீபாவளி நேரங்களில் கொண்டாட்டங்களை முழுமையாக அல்லது அனுபவிக்கவே முடியாத போனஸும் ஸ்ட்ரைக்கும் அடுத்தப் பிரச்சனையாகவும் உருவகித்திருந்தது அந்தப் பருவம். காலம் கனிய கனிய நூற்பாலைகளின் சிக்கல்கள் புலப்படத் தொடங்கின. பத்தாவது வரை படிக்க வைப்பத...

விமரிசனக்கலை

Image
ஒரு சிறுகதை நூலைப் பற்றி இலக்கிய விமரிசனம் செய்பவன் சிறுகதை இலக்கியம் பூராவையுமே விமரிசிக்கிறான். அது மட்டுமல்ல. அச்சிறுகதை இலக்கிய விமர்சனத்தை ஒரு சாக்காக வைத்துக் கொண்டு மனித குலத்தில் ஒரு பகுதியினரின் ஒரு மொழி பேசுபவரின் பண்பையே அளந்து பார்க்கிறான். இலக்கியத்தில் எந்தத் துறையிலுமே ஒரே ஒரு விதி தான் உண்டு. அந்த விதி என்னவென்றால் எப்படிப்பட்ட விதியும் இலக்கியாசிரியன் எவனையும் கட்டுப்படுத்தாது என்கிற விதி தான் அடிப்படையான விதி. எதையும் அனுதாபத்தோடு பார்க்க வேண்டும் என்று சொல்கிறார்கள். இலக்கியத்தில் அனுதாபம் தேவையே இல்லை. இலக்கிய விமரிசகன் பற்றற்றவனாக நடுநிலையில் நிற்பவனாக இருக்க வேண்டும் என்று பலரும் சொல்கிறார்கள். அது சாத்தியமே அல்ல. இலக்கிய விமர்சகனுக்கு நான் சொல்லக்கூடியதெல்லாம் இதுதான். பற்றுக்களை வளர்த்துக் கொள். ஒன்றல்ல நூறல்ல ஆயிரம் அல்ல பத்தாயிரம் லட்சம் என்று பற்றுக்களை வளர்த்துக் கொள். பற்றை வளர்த்துக்கொண்டு இலக்கியத்தை ஆயிரம் கோணங்களில் இருந்து ஒருங்கே பார்த்து அனுபவிக்கத் தெரிந்தவன் தான் நல்ல இலக்கிய விமரிசகன். இலக்கிய வளம் சாத்தியமாவது சோதனை என்கிற ஒரு தீவிரமா...

மண்ணில் உப்பானவர்கள்

Image
1930 களில் நடந்த உப்பு சத்தியாகிரகம் நம் வரலாற்றுப் பாடத்தில் ஒரு வரிச் செய்தி. ஆனால் அந்த யாத்திரைக்கான திட்டமிடல், அந்தப் பயணத்தில் கலந்து கொண்டு கொளுத்தும் வெயிலில் கொப்பளித்த கால்கள், போராட்டத்தின் முடிவில் அடித்தளமே ஆட்டம் கண்ட ஆங்கில அரசு, எல்லாவற்றிற்கும் மேலாகப் பட்டிதொட்டி எங்கும் கிளர்ந்து எழுந்த வேட்கை என ஒரு வரலாறாக மாறிப்போன உப்பு சத்தியாகிரகத்தின் கதை "மண்ணில் உப்பானவர்கள்". காரக் பகதூர் சிங் என்னும் கொலைக் குற்றவாளி தொடங்கிச் சபர்மதி ஆசிரமத்தில் கடுமையான தண்டனைகளை ஏற்றுக் கொண்ட சீடர்கள் வரை, தொடங்கிய நாளிலிருந்து 26 நாட்கள் வரை தினம் தினம் நடந்த நிலங்கள்,பாலங்கள், சேறு என ஒவ்வொன்றையும் மிகுந்த சிரமத்துடன் தொகுத்துள்ளது இந்த நூல்.  உப்பு சத்தியாகிரகத்தின் ஆரம்பத்தில் அவ்வளவாக உடன்பாடு இல்லாத நேரு, யாத்திரையின் ஒன்பதாம் நாள் மகாத்மாவைக் காண மாரளவு சேறில் நடந்து வந்தது, குறிப்பிட்ட மதம் உள்ள கிராமங்களுக்கு யாத்திரை செல்லவில்லை என்று மகாத்மாவிடம் நேரடியாக வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள், குழுவினரிடையே அவ்வப்போது தோன்றிய விரக்தி, சில இடங்களில் ஆடம்பரமாக நிக...