நிலையுள்ள அல்லது நிலையற்ற எந்த ஒரு பொருளைக் கொண்டும் ஒப்புமை கூற இயலாத ஒருவர் இளையராஜா. இளையராஜா என்பது ஓர் உணர்வு. கோபத்தை, காதலை, காமத்தை இன்னும் பல உணர்வுகளை எப்படி உணர மட்டும் முடியுமோ அப்படி இளையராஜாவை உணர மட்டுமே முடியும். உடலில் உள்ள ஒவ்வொரு மயிர்க்கால்களும் அவரால் ஆட்கொள்ளப்பட்டு தன்னை அவர் விரல்களின் நுனிச்சதையில் முழுமையாக ஒப்படைத்து கொள்ளும். குறிப்பு பாதத்தில் அல்ல. எப்படிக் கவிஞர் பிரான்சிஸ் கிருபாவைப் படிக்கும் போது நம்மைக் கிருபாவாகவே உணர்கிறோமோ எப்படி திரையில் ரஜினியின் அவமானங்களையும் வெற்றிகளையும் நமக்கானதாகவே உணர்கிறோமோ அப்படி ராஜாவைக் கேட்கும் போது, ராஜாவை உணரும் போது நம்மை ராஜாவாகவே உணர்ந்து எவர் பாதத்திலும் பணிய மனம் மறுக்கும். அதுவே ராஜ தருணம்.அதுவே குழந்தைச் செருக்கு. அப்படி உணர்தலின் வழியே அடையக்கூடிய ஒருவரை எழுத்தாளர் கி.ரா அவர்களின் அறிவுறுத்தலின்படி ரமேஷ் - பிரேம் கண்ட நேர்காணலின் விளைவே இந்தத் தொகுப்பு. இந்தத் தொகுப்பு நான்கு பகுத...
பைத்திய நிலையில் எழுதி இருக்க வேண்டும் அல்லது பித்தம் தெளிந்த நிலையில் தன் அனுபவத்தை எழுதி இருக்க வேண்டும் . ஒரு பக்கத்தில் இருந்து அடுத்த பக்கத்திற்கு கடப்பது அவ்வளவு கடினம்.ஏன் பத்திகளைக் கூட..திகட்ட திகட்ட ஆழியில் மூழ்கித் திளைப்பதுபோல வரிக்கு வரி படிமங்களுக்குள் சிக்கிக் கொள்ள வேண்டும்.. இப்படி மூடி வைப்பதற்கு எவ்வளவோ இருந்தும் கன்னி கொண்டாடப்பட வேண்டியவன். கூட்டங்களாலோ கூச்சலாலோ அல்ல. ஆழ்கடலின் அந்தரத்திற்குள் மனத்தை நிலைகுத்த வைத்து ஆன்மாவின் பரிசுத்த அன்பினால் மட்டுமே ஆராதிக்கப்பட வேண்டியவன். அது அப்படி ஒன்றும் கடினமான காரியம் அல்ல .. அவ்வளவு எளிதான காரியமும் அன்று. கவிஞர் மனுஷ்யபுத்திரன் "மன்னிப்பின் இரவு" என்ற கவிதையில் மன்னிப்பைப் பற்றிச் சொல்லும்போது "மன்னிப்பு தன்னைத்தானே சுத்தப்படுத்தும் ஒரு எளிய சடங்கு அவ்வளவு பரிசுத்தமாக இருக்கும்போதும் ஒரு நதியில் இறங்குவதுபோல ஒரு அருவிக்கு கீழ் நிற்பதுபோல" என்று எழுதி இருப்பார். தன்னைத் தானே பரிசுத்தமாக நினைப்பது என்பது அவ்வளவு எளிதல்ல. அப்படி நினைத்து விட்டால் கடலின் ஆழ்ந்த அமைதிக்குள் நம்மை நிறுத்துவதும் கடினமும...
எங்கள் ஊர்ப் பக்கங்களில் கிராம தெய்வங்களுக்கு “புரவி எடுப்பு” என்று அடிக்கடி திருவிழா நடக்கும். அந்தப் புரவி எடுப்புக்கு எட்டு நாட்களுக்கு முன்பு “சேங்காய் வெட்டு” என்று ஒரு நிகழ்வு நடக்கும். அந்த நிகழ்வில் அந்தக் கோவிலுக்கு உரியவர்கள் கோவிலுக்கு அருகில் உள்ள கண்மாய்க் கரையில் மண் வெட்டித் தலையில் சுமந்து கரையின் மேட்டில் கொட்டுவார்கள். அந்த நிகழ்வே புரவி எடுப்புத் திருவிழாவின் தொடக்கம். குதிரைகளைக் கொண்டு சென்று இறை வணக்கம் செலுத்தும் நிகழ்வுக்கும் கரையில் மண் வெட்டுவதற்கும் என்ன தொடர்பு.? ஆற்றங்கரையில் வரலாறு தோன்றியது. அந்த ஆறு குளங்களின் வரலாறு என்ன ? குளங்களுக்கும் மனிதர்களுக்கும் இருந்த உறவு எப்படி இருந்தது என்பதைப் பேசுகிறது “குளக்கரையில் இளைப்பாறும் வரலாறு”. அனுபம் மிஸ்ரா 90 களில் எழுதி அதிக விற்பனையான நூலைத் தமிழில் பிரதீப் பாலு மொழிப்பெயர்த்துள்ளார். தென்னிந்தியா நீங்கலான இந்தியாவை மையப்படுத்திக் குளம் கட்டுமானத்தில் ஆரம்பித்து, குளம் கட்டிய இனக்குழுக்கள், குளத்திற்கு வழங்கப்படும் பெயர்கள், அதன் காரணங்கள், குளத்தைப் பராமரித்தல் எனக் கிட்டத்தட்டக் குளங்...
Comments