மன்னிப்பு


அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்கள்
ஆதாரத்துடன் இருந்தாலும்

வாதத்திறமையில் வழக்கறிஞர்
வாகை சூடினாலும்

சாட்சி சொல்லச் சம்மதித்து
சாமியே வந்தாலும்

தண்டனைகள் தருவதற்கு
தகுதிகளாயிரம் இருந்தும்

மன்னிப்பை மட்டுமே
தீர்ப்பெழுதும் ஒரே நீதிபதி

அம்மா !

20/02/2015 கவிமாலையில் இரண்டாம் பரிசு பெற்றது

Comments

Popular posts from this blog

கன்னி

இளையராஜா இசையின் தத்துவமும் அழகியலும்

குளக்கரையில் இளைப்பாறும் வரலாறு