சல்லிக்கட்டு
ஏலத்தில் எடுத்ததில்லை
ஏமாற்றத் தேவையில்லை
தோற்பதற்கும் வெல்வதற்கும்
'கூட்டிக்' கொடுக்கும் பழக்கமில்லை
ஆனாலும் எம்மண்ணில்
விளையாட உரிமையில்லை.
காரணம் ?
கொம்புகளின் நடுவே
கோடிகள் புரளாமல்
வீரமும் மானமும்
விரும்பி புணருவதால்.
தான் ஏமாறுவதை
தானே கொண்டாடும்
கூட்டமது உள்ளவரை
வீர விளையாட்டுக்குத்
தடைகோரும் தவளைகளை
வசை பாடி என்ன பயன் ?
Comments