பாரதி



நதிநீர் இணைக்க நயத்துடன் சொல்லி

விதிவழி சென்றுநீ விண்ணை யடைந்தாய்

கதியின்றி மூழ்கினோம்; காப்பாற்று பிள்ளைகளை

வாதியாய் மீண்டும்நீ வந்து.


தட்டேந்த வைப்பர் தனியேநீ வந்தால்;உன்

பாட்டுப் புரட்சிக்கும் பாயும் வழக்குபல.

கூட்டி வருவாய் குமாரசாமி மைந்தனை;பின்

வெட்டி களுக்கு-வை வேட்டு.



குமாரசாமி மைந்தன்- பெருந்தலைவர் கு.காமராசர்.

Comments

Popular posts from this blog

கன்னி

இளையராஜா இசையின் தத்துவமும் அழகியலும்

குளக்கரையில் இளைப்பாறும் வரலாறு