காமராசர் - நேரிசை வெண்பா



சத்தமே இல்லாது சாதனைகள் செய்துபுகழ்

பித்தம் பிடிக்கா புனிதன்நீ - நித்தமும்

செய்தியில் வந்திட செய்கிறார் கூத்துக்கள்

அய்யய்யோ என்போம் அழுது.



பசியின்றிப் பிள்ளைகள் பாடம் படித்திட

யாசிக் கவும்நீத யாராகி - நேசித்து

தீட்டிய சத்துணவில் தீயவர்கள் கள்ளையும்

ஊட்டலாம்; நஞ்சே உலகு.


Comments

Popular posts from this blog

கன்னி

இளையராஜா இசையின் தத்துவமும் அழகியலும்

குளக்கரையில் இளைப்பாறும் வரலாறு