காமராசர் - இன்னிசை வெண்பா
பத்து தலைமுறைக்கும் பக்குவமாய் சேர்த்திட்ட
சொத்தில் சுகம்பேணும் சொல்வேந்தர் மத்தியில்
பெத்தவளைச் சேர்க்காத, பெண்ணின்பம் எண்ணாத
உத்தமன்நீ நேர்மையின் ஊற்று.
ஏடாள எண்ணாது ஏழைகள் நெஞ்சாண்டு
வாடாது என்னுள்ளே வாழ்பவர் - நாடாளும்
வேதங்கள் சொல்லிய வேந்தர் பிறந்தசூலை
மாதம்தான் ஆண்டினிலே மாண்பு.
Comments