கன்னி
பைத்திய நிலையில் எழுதி இருக்க வேண்டும் அல்லது பித்தம் தெளிந்த நிலையில் தன் அனுபவத்தை எழுதி இருக்க வேண்டும் . ஒரு பக்கத்தில் இருந்து அடுத்த பக்கத்திற்கு கடப்பது அவ்வளவு கடினம்.ஏன் பத்திகளைக் கூட..திகட்ட திகட்ட ஆழியில் மூழ்கித் திளைப்பதுபோல வரிக்கு வரி படிமங்களுக்குள் சிக்கிக் கொள்ள வேண்டும்.. இப்படி மூடி வைப்பதற்கு எவ்வளவோ இருந்தும் கன்னி கொண்டாடப்பட வேண்டியவன். கூட்டங்களாலோ கூச்சலாலோ அல்ல. ஆழ்கடலின் அந்தரத்திற்குள் மனத்தை நிலைகுத்த வைத்து ஆன்மாவின் பரிசுத்த அன்பினால் மட்டுமே ஆராதிக்கப்பட வேண்டியவன். அது அப்படி ஒன்றும் கடினமான காரியம் அல்ல .. அவ்வளவு எளிதான காரியமும் அன்று. கவிஞர் மனுஷ்யபுத்திரன் "மன்னிப்பின் இரவு" என்ற கவிதையில் மன்னிப்பைப் பற்றிச் சொல்லும்போது "மன்னிப்பு தன்னைத்தானே சுத்தப்படுத்தும் ஒரு எளிய சடங்கு அவ்வளவு பரிசுத்தமாக இருக்கும்போதும் ஒரு நதியில் இறங்குவதுபோல ஒரு அருவிக்கு கீழ் நிற்பதுபோல" என்று எழுதி இருப்பார். தன்னைத் தானே பரிசுத்தமாக நினைப்பது என்பது அவ்வளவு எளிதல்ல. அப்படி நினைத்து விட்டால் கடலின் ஆழ்ந்த அமைதிக்குள் நம்மை நிறுத்துவதும் கடினமும...
Comments