கவிதை

 

நெரிசலற்ற பாதையில்

சீரான ஒரே வரிசையில்

ஊர்கிறது பயணம்

காதல் முன்வண்டியில்

செல்கிறது.

காமம் பின்வண்டியில்

துரத்துகிறது.

காமத்திற்கும் காதலுக்கும்

இடையில் பயணிப்பது

அவ்வளவு சுகமில்லை.

ஆனால் சுவாரசியமானது.

சாலையின் இருமருங்கிலும்

அவ்வளவு வேகமாக ஓடுகின்றன

திணைகள்

யுகங்கள்

உணர்வுகள் .

யார் நட்டது தெரியவில்லை

உணர்வுகள் மட்டும்

பின்னோக்கிச் செல்கின்றன.

 

Comments

Popular posts from this blog

கன்னி

இளையராஜா இசையின் தத்துவமும் அழகியலும்

குளக்கரையில் இளைப்பாறும் வரலாறு