கவிதை
மலை வனங்களுக்குள்
மறைந்திருக்கும் ஒளியைக்
கண்டடைய பணித்திருக்கிறது காலம்.
ஒளி நிறைந்திருக்கிறது
இருந்தும் நீங்கியிருக்கிறது .
முகடு நோக்கி மெதுவாய்
நகரும் பனிமேகத்தின்
அகங்காரப் பிதற்றல் உனக்கு.
எதற்கும் அசையாத
மலையின் வெற்றுத்திமிர் எனக்கு.
சதை தின்னும் நம்
விலங்குகளுக்கு தெரிவதில்லை
இவையெதுவும்.
Comments